குறள் பால் – அறத்துப்பால்,இயல் -
இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின்
நோன்மை உடைத்து.
விளக்கம்:
கலைஞர்:
தானும் அறவழியில்
நடந்து, பிறரையும் அவ்வழியில் நட்க்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள்
கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையாதாகும்.
புலியூர்க் கேசிகன்:
பிறரையும்
அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின்
நோன்பைவிட வலிமையானது ஆகும்.
No comments:
Post a Comment